Posts

Showing posts from July, 2026

தனிமையின் காத்திக் உணர்வு - சித்தாரா 1984 தெலுங்கு

Image
ஒரு திரைக்கதையை வெறும் காகிதத்திலிருக்கும் எழுத்துக்களாக மட்டும் பார்க்காமல், அதை மனித வாழ்வியலின் பிரதிபலிப்பாகப் பார்க்க உதவுபவன் ஒரு நல்ல படைப்பாளி. இந்திய தெலுங்கு சினிமாவின் முக்கியமான இயக்குனர் வம்சி. முதலில் இந்த கதையை ஒரு நாவலாக எழுதி பின்னர் அவரே இயக்கி திரைப்படமாக எடுத்து ஏகப்பட்ட பாராட்டுக்களை இந்த படத்துக்காக வாங்கிக்கட்டிக்கொண்டார். கமர்ஷியலாகவும் பேய்மழை. இளையராஜா இசை. கோதாவரி நதிக்கரையோரம் நடக்கும் கதை. அடிக்கடி "வென்னெல்லோ கோதாரி அந்தம்" பாடலை கேட்பதுண்டு. இதன் தமிழ் பதிப்பை விட தெலுங்கில் கேட்பது எனக்கு பிடிக்கும். அட்டகாசமான பாடல். படமும் சிறப்பாக இருக்கும். எஸ். ஜானகியின் குரல் மேஜிக் செய்திருக்கும் பாட்டு. படம் எடிட்டிங் செய்யப்பட்டு முதல் பிரதி தயாரான போது, அதன் நீளம் மிக அதிகமாக இருந்திருக்கிறது. தயாரிப்பாளர் நாகேஸ்வர ராவ் கவலைப்பட்டாலும், படத்தை பார்த்த திரையுலக விநியோகஸ்தர்கள் சிலர், "எடிட்டிங் மோசம்! படம் மிக மெதுவாக நகர்கிறது, ஓடாது" என்று கூறிவிட்டார்கள். வந்தார் இளையராஜா. படத்தின் எடிட்டிங் மீது கைவைக்காமல், படத்தொகுப்பின் தாளத்திற்கு இணங...