Posts

Showing posts from February, 2026

சோம்பேறியின் நினைவுச்சின்னம் - சிறுகதை

Image
வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கிறேன். மொட்டை மாடியுடன் கூடிய ஒரு அறை. யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பினை? பாதி மொட்டைமாடி மீதி வீடு. ஒரு கயித்துக்கட்டில். இரவில் தாபாவில் பட்டர் நாண் சாப்பிடுவது போல பன்னீர் பட்டர் மசாலாவும் சிக்கன் 65யும் ஆர்டர் செய்து இரவு வானை ரசித்த படி சாப்பிடுவேன். 11 மணிக்கே இப்போதெல்லாம் சாப்பிட்டு விடுகிறேன். ஒருமணி இரண்டுமணி வரையெல்லாம் இப்போது எனது இரவுகள் செல்வதில்லை சுதாரித்துக்கொண்டது. இந்த நூறு சதுரடி அறைதான் இப்போது என் பிரபஞ்சம். ஒரு பழைய பேச்சிலர் ரூமாக இருந்தது. இதற்கு முன் இங்கே இருந்தவர்கள் செடி வளர்த்து மாட்டி பிரச்சனையாகி சண்டைபோட்டு வீட்டை காலி செய்து அதற்கு பின்னர் ஆறு மாதம் ஸ்டோர் ரூமாக வைத்து. வாடகை விடவே ஐடியா இல்லாத வீட்டு உரிமையாளரிடம் நான் பேசி இப்போது குடிபெயர்ந்து இருக்கிறேன். என்னுடைய பேச்சு திறமையை நினைத்து நான் வியக்காத நாளில்லை. ஆனால் எனது வாழ்வின் தோல்விகளுக்கும் இப்போது சொந்த வீட்டில் தங்காமல் இப்படி வாடகைக்கு தீப்பெட்டியின் ஒற்றை தீக்குச்சியாக தங்குவதற்கும் இந்த பேச்சு தான் காரணம். வீட்டு உரிமையா...

கல்முகத்தின் காதல் - General 1925 USA

Image
நான் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று அடிக்கடி நினைவூட்டும் படம் இந்த ஜெனெரல். ரயில்கள் தண்டவாளத்தில் தான் செல்ல வேண்டும் என்பதால், துரத்தல் சாகசக் காட்சிகளை விறுவிறுப்பாக எடுப்பது கடினம். ஆனால் கீட்டன் அபாரமான கற்பனை கொண்டு க்ரியேட்டிவாக அடுத்தடுத்துப் பல நகைச்சுவைக் காட்சிகளை திரைக்கதையில் கோர்த்து டூப் போடாமல், ஆபத்தான சாகசங்களை அவரே செய்து கதையோடு காட்சியை சேர்த்து சுவாரஸ்யப்படுத்தி பின்னிப்பெடலெடுத்து அதகளம் செய்திருப்பார். அதனால் தான் நூறு வருடங்கள் ஆகியும் இந்த படம் பார்க்க குதூகலமாக இருக்கிறது. எளிமையான கதையையும், அதே நேரத்தில் தர்க்கரீதியான சுவாரஸ்யத்தையும் கொண்ட படம். வில்லியம் பிட்டிங்கர் எழுதிய “தி கிரேட் லோகோமோட்டிவ் சேஸ்” என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, உண்மைச் சம்பவத்தைத் தழுவி இது எடுக்கப்பட்ட திரைப்படம். படம் தொடங்கும் போது போர் அறிவிக்கப்படுகிறது. ஜானி கிரே என்பவர் தனது காதலி அன்னபெல் அறிவுரைப்படி ராணுவத்தில் சேரச் சென்றும் நிராகரிக்கப்படுகிறார். "நீ சீருடையில் வரும் வரை என்னிடம் பேசாதே" என அன்னாபெல் கூறிவிடுகிறாள். காத...